மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் – தினகரன் பரபரப்பு தகவல்
மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் என்று டிடிவிதினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார்
* விசாரணை ஆணையம் மூலமே ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை வெளிவரும்.
* விசாரிக்கப்பட வேண்டியவர்களை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் விசாரிக்கவில்லை.
* வெளியிடப்பட்ட சிகிச்சை வீடியோ, ஜெயலலிதா கேட்டு சசிகலா எடுத்தது.
* நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
